×

ராகுல்காந்தியை பின்தொடர்ந்த வாகனங்கள் மீது தாக்குதல் பாஜவை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

சென்னை: ராகுல்காந்தியை பின்தொடர்ந்த வாகனங்கள் மீது தாக்குதல் நடத்திய பாஜவினரை கண்டித்து கே.எஸ்.அழகிரி தலைமையில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. அசாம் மாநிலத்தில் இந்திய ஒற்றுமை நீதி பயணம் மேற்கொண்ட ராகுல்காந்தியை பின்தொடர்ந்த வாகனங்கள் மீது தாக்குதல் நடத்திய பாஜவின் வன்முறை செயலை கண்டித்து சென்னை சத்தியமூர்த்தி பவன் முகப்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், எம்.பி.ரஞ்சன்குமார், சிவராஜசேகரன், ஜெ.டில்லிபாபு, எம்.ஏ.முத்தழகன், அடையாறு துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் சிறுபான்மையினர் நல ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ், துணை தலைவர்கள் கோபண்ணா, பொன்கிருஷ்ணமூர்த்தி, பொது செயலாளர்கள் சிரஞ்சிவீ, தளபதி பாஸ்கர், இலக்கிய அணி தலைவர் பி.எஸ்.புத்தன், சூளை ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களை போலீசார் தடுப்புகள் அமைத்து தடுத்தி நிறுத்தினர். இதைத் தொடர்ந்து காங்கிரசார் கலைந்து சென்றனர்.

* அசாம் பவன் முற்றுகை: இதற்கிடையில் பாஜவின் செயலை கண்டித்து, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் எஸ்சி எஸ்டி துறை சார்பில் இன்று காலை 11 மணியளவில் சென்னை பள்ளிக்கரணையில் உள்ள அசாம் பவன் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடைபெறும் என தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்சி, எஸ்டி பிரிவு மாநில தலைவர் எம்.பி.ரஞ்சன்குமார் தெரிவித்துள்ளார்.

The post ராகுல்காந்தியை பின்தொடர்ந்த வாகனங்கள் மீது தாக்குதல் பாஜவை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Congress ,BJP ,Rahul Gandhi ,CHENNAI ,Satyamurthy Bhavan ,KS Azhagiri ,India ,Assam ,Dinakaran ,
× RELATED 2014ம் ஆண்டுக்கு முன் காங்கிரஸ் பெற்ற...